திங்கள், 9 பிப்ரவரி, 2015

பைரவர் வழிபாடு


Posted By Muthukumar On Feb 9,2015




ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

   இவர் அமர்ந்தநிலையில் தன் மடியில் அஜாமிளா (பைரவியை) அமர்த்திக் கொண்டுஒரு கரத்தில் அமுதகலசமும்ஒருகரத்தில் சூலமும் கொண்டு வைரகிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்துதம்பதி சமேதராக காட்சிதருகின்றார்இவரை அஷ்டமி திதி மற்றும்பவுர்ணமி நாளில்வெள்ளிசெவ்வாய்கிழமைகளில் வணங்கினால்சகல சம்பத்தும்பொன்பொருளும் கிட்டும்ஸ்ரீபைரவருக்குப் பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமியில்பஞ்ச தீபம் ஏற்றிவழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள்நீங்கும்நல்லருள்கிட்டும்இலுப்பைஎண்ணெய்விளக்கெண்ணெய்தேங்காய் எண்ணெய்நல்லெண்ணெய்பசு நெய் இவற்றினைதனித்தனி தீபமாக அகல்விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணியகாரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

      வாழ்க்கையில்தரித்திரம் வராமல் காத்து செல்வச்செழிப்பை வழங்குபவர்ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்குதிசை நோக்கி அமர்ந்து வழிபடுவதுசிறப்புதிருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள்செல்வம்கிட்டும்தாமரை மலர் மாலைவில்வ இலை மாலை போடுவதுசிறந்ததுதேய்பிறை அஷ்டமிதிதிகளில் செவ்வாடைஅணிவித்துநெய் விளக்கு ஏற்றிவடைமாலை சாற்றிசெந்நிற மலர்களைக்கொண்டுஅர்ச்சித்துவெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.
   
      ஞாயிற்றுக்கிழமைமாலை ராகு கால நேரத்தில்பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றிவிபூதி அல்லதுருத்ராபிஷேகம் செய்துவடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனைசெய்து வழிபட்டால் திருமணம்ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம்கூடும்.இவரை வழிபாடு செய்வதால்வறுமைபகைவர்களின்தொல்லைகள்பயம் நீங்கி அவர்அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும்தனலாபமும்வியாபார முன்னேற்றம்,பணியாற்றும்இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைபெறலாம்நம்பிக்கையுடன்பக்தியுடன்சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரத்தை வீட்டில் வைத்துதினந்தோறும் தூப தீபம் காட்டிவழிபட்டு வருவதுடன்தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்குபூஜை செய்து பலவிதமான மலர்களைக்கொண்டு பூஜித்து வணங்கிவந்தால் வீட்டில்செல்வச்செழிப்புஏற்படும்.

   வியாபாரிகள் கல்லாப் பெட்டியில்சொர்ண ஆகர்ஷண பைரவர்பைரவிசிலை அல்லது யந்திரம்,படம்வைத்துபூஜித்து வர கடையில் வியாபாரம்செழித்து செல்வம் பெருகி வளம்பெறுவார்கள்தினமும் பைரவர்காயத்ரியையும்பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில்செல்வம் பெருகும்வெல்லம் கலந்த பாயசம்,உளுந்துவடைபால்தேன்பழம்வில்வ இலைகளால் மூலமந்திரம் சொல்லி  அர்ச்சனைசெய்ய தொழில்விருத்தியாகும்ஸ்வர்ணகர்ஷணபைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத்தரும்வெள்ளிக்கிழமைதிங்கட்கிழமைஇரண்டு நாட்களிலும் சந்தியாகாலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும்தன விருத்தியையும்அடைவார்கள்.  பவுர்ணமிஅன்று  இரவுஎட்டு மணிக்கு தீபத்தை ஏற்றிவைத்துக்கொண்டு பதினெட்டு முறைபாராயணம் செய்யவேண்டும்.

   இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில்பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்நீண்டநாட்களாக உள்ள  வறுமையிலிருந்துவிடுபடலாம்ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம்நைவேத்தியம்செய்யலாம்கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமிபைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.கோரிக்கைகளை  நம்பிக்கையுடன்பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

   சித்திரை - பரணிஐப்பசிபரணி போன்ற மாதங்களில் வரக்கூடியபரணி நட்சத்திரம்கால பைரவருக்கு விசேஷநாள்கள் ஆகும்ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான்பைரவர் அவதரித்தார்எனவே பரணிநடசத்திரக்காரர்கள்பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும்பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில்பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்தபலன்களை கொடுக்கும்.பைரவர் விரதம் எல்லாஅஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்ஆனால் செவ்வாய்க்கிழமைகளில்அஷ்டமி இணைந்து வந்தால்அதைவிடச் சிறப்பான நாள் எதுவுமில்லை.
  குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்அதிகாலையில்  நீராடிபைரவரைமனதில் நினைத்து வணங்கவேண்டும்பகலில் இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதுஅன்று மாலைபைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபட வேண்டும்வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும்ஏற்றினால்போதும்

சிதம்பரத்தில் சொர்ண பைரவர்

   சிதம்பரம் நடராஜப் பெருமானுடைய சித்திர சபையில் கீழ்புறத்தில் வைக்கப்பட்டுள்ள சொர்ண பைரவ முர்த்தியின் பாதத்தில் சுமார் இருநுரு,முன்னுறு வருடங்களுக்கு முன் அப்போது வாழ்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் செப்புத்தகட்டை அர்த்தஜாமப் பூஜையின் போது மந்திரங்கள் கூறி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார்களாம் மறுநாள் காலையில் வந்து பார்க்க பைரவப் பெருமானின் பேரருளால் அந்தச் செப்புத் தகடு சொர்ணத் தகடாக மாறி இருக்குமாம் பின் அதை விற்று வாழ்க்கையை இனிமையாக கழித்ததாகக் கூறப்படுகிறது. இக்காலத்திலும் இவரை அன்புடன் உள்ளம் உருகி வணங்கி வழிபட்டு வர சகல சௌபாக்யங்களும் கிட்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமருகம்
திரிசுலம் வரம் கரை
ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவயாயுதம் தப்தஸவர்ண
வர்ஷணம் ஸ்வர்ணா
கர்ஷணம் பைரவம்


ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் துதி

“ஸ்வர்ண கால பைரவம் த்ரிசுலயுக்த பாணி நம்
வேத ருப ஸாரமேல் ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாச்ரி தேஷ ஸர்வதா ஸமஸ்தவஸ்து தாயினம்
மகீந்திரி வம்ச பூர்வ புண்ய ருபினம் ஸமாச்ரயே”
   
  மேற்கன்ட ஸ்வர்ணாகர்சண மந்திரத்தினை தில்லை வாழ் அந்தணர்கள் அறுபத்து நான்காயிரம் தடவைகள் பைரவர் முன் கூறி வைத்துவிட்டு செல்லும் செப்புத் தகடே பொன் தகடாக மாறி அவர்களுக்கு வளமையை அள்ளித் தந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்


”ஏக சஷ்டி அஷரம் மந்திரம் லகு சித்தப்ரதாயகம்

ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஷ்ய சித்தியே.”

(வேறு மூல மந்திரம்)

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ



    ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம்