புதன், 17 ஜூலை, 2013

பரிகாரம் - வெண்கடுகு

Posted On JUly 17,2013,By Kumaran
 பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் ,  குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும்  வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு  எளிய   பரிகாரம் - வெண்கடுகு
 http://i00.i.aliimg.com/photo/103523583/sambrani_and_camphor.jpg

http://pimg.tradeindia.com/00790605/b/1/Natural-Sambrani.jpg 

சாம்பராணி தூபம் அல்லது அதிசய  கம்ப்யூட்டர் சம்பராணி - ல தூபம் போடும் பொது  கொஞ்சமா வெண்கடுக அதற்குள்ள  போட்ட போதும் ( வேற ஏதும் செய்ய வேண்டாம் )   வாசனை வெண்கடுக போட்டதுக்கப்பம் வேற மாதிரி வரும் , அந்த புகையை வீட்டில் உள்ள எல்லா இடங்களுக்கும் பரவும் படி செய்தால் போதும் . வெண்கடுகு நாட்டு மருந்து கடைல கிடைக்கும் 

இதை தொடர்ந்து 3 மாதத்திற்கு அல்லது நம்ம பிரச்னை தீரும் வரை நம்பிகையுடன் ( நம்பிக்கை இல்லாமல் செய்து வந்தாலும் ) செய்து வந்தால் போதும்  குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் ,( குடும்பத்தில் எப்ப பார்த்தாலும்  ஒருதருகொருத்தர் சத்தம் போட்டுகிட்டு , சண்டை அடிச்கிட்டு , ஒருத்தர ஒருத்தர் திட்டி கிட்டு , தேவையே இல்லாம சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை அடிச்கிட்டு இருக்கிற சூழ்நிலை அப்படியே தலை கீழாக மாறும் .
 இது 100 சதவீதம் எனக்கு ஏற்பட்ட அனுபவ உண்மை 

சாய் பாபா உபாசகர் (என் குருநாதர் ) என்னை செய்ய சொன்ன பரிகாரம் இது :
ஆரம்பத்துல எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை , ஆனாலும் சொல்லிட்டாரே- னு  3 மாசம் சிரமம் பார்க்காம காலைலயும் , சாயந்தரமும் சும்மா 2 நிமிசம் மெனக்கெட்டு செய்தேன், இதுக்குன்னு பெருசா பக்தியோ , பூஜையோ எதுவுமே பன்னால , எப்பவும் போல சாமி கும்பிடரப்ப செஞ்சேன் அவ்வளவுதான் .ஆனா 3 மாசத்துல அப்படியே எல்லாம் தலை கீழா மாறிடிச்சு ,ஒருத்தருகொருத்தர் அன்பா , ஆதரவா , மாறிட்டோம் 
இது எப்படி சாத்தியம் னு குழம்பி தான் போனேன் 

வெண்கடுகு - ல அப்படி  என்ன இருக்கு ? அந்த புகை மனோ ரீதியாகவும் , உடல்  ரீதியாகவும் என்ன மாற்றத்த உண்டு பண்ணுது ? அப்படிங்கற அறிவியல்  ஆராய்ச்சிக்குள்ள போக நான்  விரும்பலை .ஆன்மிக ரீதியா ஏதோ ஒரு உண்மை 
கண்டிப்பா இருக்கு .

ஆனா மிக பெரிய அளவில நன்மை ஏற்பட்டிருக்கு -கறது மட்டும் பட்டவர்த்தனமான, மறுக்க முடியாத  உண்மை . 

வீட்டில் உள்ள தீய சக்தி எப்படி வெளியேறும் - னு விளக்கம் கொடுத்தார் .

வெண்கடுகோடா புகை சுட்சமமா வீட்டுக்குள்ள இருக்கற தீய சக்தியோட ( ஏவல், பில்லி சூனியம் , செய்வினை ,குட்டி சாத்தன்,பேய் ,பிசாசு )
கண்ணுல பட்ட அதால அந்த கண் எரிச்சலை தாங்கவே முடியாதாம் , அதுக்கு (தீய சக்தி களுக்கு) ரொம்ப நேரத்துக்கு  கண்ணு தெரியாம போயிடுமாம் , உடனே அந்த வீட்ட விட்டு வெளியே ஓடி போய்டும் ,யாரை பாலோ பண்றது-னு தெரியாம குழம்பி போய்டும் , எந்த வீட்டுல  புகை அது கண்ணுல பட்டதோ திரும்ப அந்த வீட்டுக்குள்ள நுழையவே தயங்கும்,பயப்படும் 

செய்து பாருங்கள் , நிச்சயம் 100  சதவிதம் அமைதியும் , நிம்மதியும் வீட்டுல  கிடைக்கும் , பிரிந்து சிதறிய குடும்பம் ஒன்று சேரும் . இது சத்தியமான உண்மை . 

நன்றி : சாய் பாபா உபாசகர் (என் குருநாதர் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக